Free Shipping on Orders over ₹ 2,500/-
Sale!

புகழோங்கிய பாரதம்

Original price was: $ 300.Current price is: $ 200.

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் 1925ல் தொடங்கப்பட்டு தற்போது வரை தேச முன்னேற்றப் பணியில் அனைத்துத் துறைகளிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனது நூற்றாண்டில் அடி எடுத்து வைக்கிறது. சங்கத்தின் இந்த நீண்ட பயணத்தில் தற்போதைய ஆறாவது சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், விழாக்களிலும் நிகழ்த்திய முக்கிய உரைகளின் தொகுப்பு நூலாக வெளி வந்திருக்கிறது. கடந்த 2018ம் ஆண்டு தில்லியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் (மூன்று நாட்கள்) ஆற்றிய உரைகளும், கேள்வி-பதில் நிகழ்வும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ப்ரபாத் ப்ரகாஷன் (தில்லி) சமீபத்தில் ஹிந்தியில் (“யஷஸ்வி பாரத்”) வெளியிட்ட இந்த சிறப்பானதொரு நூலினை தமிழில் “புகழோங்கிய பாரதம்” எனும் தலைப்பில் வெளியிட விஜயபாரதம் பிரசுரம் முடிவெடுத்தது.

இதன் தமிழாக்கத்தை அழகு தமிழில் எளிய நடையில், தனக்கே உரித்தான பாங்குடனும், சொல் நயத்துடனும் மொழியாக்கம் செய்து அளித்துள்ளார் நமது தக்ஷிண க்ஷேத்ர சங்கசாலக் முனைவர் இரா. வன்னியராஜன் அவர்கள்.

இந்நூல் சங்க ஸ்வயம்சேவகர்கள், கார்யகர்த்தர்கள் மற்றும் அறிவார்ந்த சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டியாகவும், தேசப்பணியினை மேலும் உற்சாகத்துடன் செய்ய ஊக்கமளிப்பதாகவும் நிச்சயம் அமையும் என்று நம்புகின்றோம்.

Out of stock

SKU: VB-79 Category:
Delivery in India Only.
Share
Publisher

விஜயபாரதம் பிரசுரம்

Book Language

தமிழ்

Book Author

மோகன் பாகவத்

Reviews

There are no reviews yet.

Be the first to review “புகழோங்கிய பாரதம்”
Shopping Cart