Free Shipping on Orders over ₹ 2,500/-

தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்

நேற்று (26.02.21) சென்னை புத்தகக் காட்சி, விஜயபாரதம் அரங்கில் (358, 359) ‘தமிழகம் தந்த தவப்புதல்வர்கள்’ புத்தக வரிசையின் வெளியீடு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் அவர்கள் புத்தகத் தொகுப்பை வெளியிட, தேசிய ஊடகவியலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு. ஜெயகிருஷ்ணன் அவர்கள் முதல் புத்தகத் தொகுப்பினை பெற்றுக் கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் வட தமிழக இணைச் செயலாளர் திரு. ராமகிருஷ்ண பிரசாத் அவர்கள் இந்த புத்தக வரிசை உருவாக்கம் மற்றும் புத்தகத் தொகுப்புகளின் சிறப்பு குறித்தும் விளக்கினார்.

முன்னதாக விஜயபாரதம் பிரசுரம் செயலாளர் திரு. கார்த்திக் அவர்கள் அனைவரையும் வரவேற்று, சிறப்பு
விருந்தினர்களை அறிமுகம் செய்து இந்தப் புத்தக வரிசையினை அறிமுகம் செய்து அதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.

இந்தப் புத்தக வரிசை உருவாக்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பங்களித்த அனைவரும், இந்த நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.

Shopping Cart