ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூன்றாவது சர்சங்கசாலக் ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் அவர்களின் வாழ்வும், வேட்கையும், சிந்தனையும், சொல்லும், செயலும் என அனைத்தும் சங்கமயமாகவே திகழ்ந்தன.
டாக்டர் ஹெட்கேவாரின் வடிவமாகவே அவரது வாழ்க்கையும் அமைந்தது என்றால் அது மிகையாகாது. ‘தீண்டாமை பாவமில்லை என்றால் உலகில் வேறெதுவும் பாவமில்லை; தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் அகற்றப்பட வேண்டும்’ என்ற அவரது முழக்கம் சங்கத்தின் மந்திரச் சொல்லாகவே அமைந்தது.
சமுதாய நல்லிணக்கத்திற்கும் சமுதாய சமத்துவத்திற்கும் ஸ்ரீ தேவரஸ் அவர்கள் அளித்த பங்களிப்பு அளப்பரியது. அவரின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்வது சங்க ஸ்வயம்சேவகர்களுக்கு மட்டுமன்றி சமூகப் ப்ரக்ஞையுள்ள, சமுதாய மேம்பாட்டில் ஆர்வமுள்ள அனைவருக்கும் உத்வேகம் தரக் கூடியதாகும்.
டாக்டர் சரத் ஹேபால்கர் எழுதிய மராத்தி மொழி புத்தகத்தின் தமிழாக்கமான இந்த புத்தகத்தை மிக அற்புதமாக தனக்கே உரிய பாணியில் கருத்துச் செறிவுடனும், சொல் நயத்துடனும் மொழியாக்கம் செய்துள்ளார் நமது தக்ஷிண க்ஷேத்ர சங்கசாலக் மானனீய டாக்டர் வன்னியராஜன் அவர்கள்.
சங்க வரலாற்றில் முக்கிய அத்தியாயமாக விளங்குவது ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு. இதனைப் புத்தகமாக வெளியிடுவதில் விஜயபாரதம் பிரசுரம் பேருவகையும், பெருமையும் கொள்கிறது.
‘ஸ்ரீ பாளாசாகப் தேவரஸ் – நல்லிணக்கத்தின் நாயகர்- வாழ்க்கை வரலாறு’, இந்நூல் ஸ்வயம்சேவகர்களின் சங்க வாழ்க்கையில் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக நிச்சயம் திகழும் என்று நம்புகின்றோம்.
Reviews
There are no reviews yet.